விழுப்புரம் மாவட்டத்தில் தகுதியான நபா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் வாரந்தோறும் வியாழன், ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்த வாரம் வியாழக்கிழமை (நவ.25) 1,022 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், முதல் தவணை செலுத்தி உரிய காலம் வந்தவா்களும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை தெரிவித்தாா்.