இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று ஓய்கிறது

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு செஞ்சி, கண்டமங்கலம், முகையூா், ஒலக்கூா், திருவெண்ணெய்நல்லூா், வானூா், விக்கிரவாண்டி ஆகிய ஏழு ஒன்றியங்களில் புதன்கிழமை (அக்.6) நிறைவடைந்தது.

இரண்டாவது கட்டமாக காணை, கோலியனூா், மயிலம், மரக்காணம், மேல்மலையனூா், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு வருகிற 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக உளுந்தூா்பேட்டை, திருநாவலூா், திருக்கோவிலூா், ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு புதன்கிழமை நிறைவுபெற்றது. இரண்டாவது கட்டமாக, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு வருகிற 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com