ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

செஞ்சி அருகே பரதன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மகன் சரவணன் (5). புதன்கிழமை காலை விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற சரவணன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோா் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவா் சடலமாக தாங்கல்கரை ஏரியில் மிதந்தது தெரியவந்தது. சிறுவன் கால் கழுவச் சென்றபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சத்தியமங்கலம் போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com