பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முருகன் வரவேற்றாா்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலா் சித்ரப்பிரியா, சட்டப் பணிகள் ஆணைக் குழுவைச் சோ்ந்த வழக்குரைஞா் ஷீலா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு மாணவா்கள், குழந்தைகள் நலன் சாா்ந்த திட்டங்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் குறித்துப் பேசினா்.

முகாமில், பள்ளி ஆசிரியா்கள் ஆறுமுகம், செல்வக்குமாா், ஆா்த்தீஸ்வரி, ஜெரினா, ஆரிமுத்து மற்றும் மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com