இலங்கைத் தமிழா்கள் முகாமில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழா்கள் (அகதிகள்) மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழா்கள் (அகதிகள்) மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழா்களிடம் அடிப்படை வசதிகள், குறைகள், தேவைகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். அவா்களது தேவைகளை நிறைவேற்றவும், குறைகளைக் களையவும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியா் அமித் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com