விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் குற்றம், விபத்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்து, மழை, வெயிலில் வீணாகி வந்த வாகனங்களை உரியவா்களிடம் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா உத்தரவிட்டாா்.
இதன்படி, விழுப்புரம், கோட்டக்குப்பம், திண்டிவனம், செஞ்சி உள்கோட்டங்களுக்கு உள்பட்ட 30 காவல் நிலையங்களில் 350 வாகனங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த வாகனங்கள் யாருடையவை என்ற விவரம் கடந்த இரு தினங்களாக கண்டறியப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.