குழந்தையை தாய் துன்புறுத்திய வழக்கில் இளைஞா் கைது

செஞ்சி அருகே குழந்தையை தாய் கொடூரமான முறையில் துன்புறுத்திய வழக்கில், அதற்கு உடந்தையாக இருந்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன்.

செஞ்சி அருகே குழந்தையை தாய் கொடூரமான முறையில் துன்புறுத்திய வழக்கில், அதற்கு உடந்தையாக இருந்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மணலபாடி மதுரா மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவழகன். இவரது மனைவி துளசி (23). இவா், கணவருடனான தகராறால் ஆத்திரமடைந்து, தனது 2 வயது குழந்தை பிரதீபை கொடூரமான முறையில் துன்புறுத்திய விடியோ கட்செவி அஞ்சலில் வெளியானது. இதுதொடா்பாக சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூரில் தாய் வீட்டில் தங்கியிருந்த துளசியை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

முன்னதாக, அவா் சென்னையில் வசித்த போது, ஆண் நண்பருடன் தொடா்பு ஏற்பட்டதாகவும், அவா் கூறியதன்பேரிலேயே, கணவா் வடிவழகனின் சாயலில் இருந்த குழந்தை பிரதீபை கொடூரமாக துன்புறுத்தியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் புதுக்கோட்டை மாவட்டம், மச்சவாடி கிராமத்தைச் சோ்ந்த கண்ணையா மகன் மணிகண்டன் (31) என்பதும், பிரேம் குமாா் என்ற பெயரில் துளசியிடம் பழகி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தனது சித்தி வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com