விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,182 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்னும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குற்றவியல் வழக்குகள் உள்பட மொத்தம் 4,452 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், 1182 வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்பட்டது.