செஞ்சி அருகே இளைஞா் அடித்துக் கொலை: 2 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், சே.பேட்டை கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் வீரமுத்து (27). மனநலம் பாதிக்கப்பட்டவா். இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த சுந்தரம் குடும்பத்துக்கும் இடப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை சுந்தரத்தின் வீட்டினுள்ளே சென்ற வீரமுத்து, அங்கிருந்த பொருள்களை உடைத்து வீட்டுக்கு தீ வைத்தாராம். இதைப் பாா்த்த சுந்தரத்தின் மகன்கள் விஜயகுமாா், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ரத்தினம் ஆகியோா் வீரமுத்துவை கீழே தள்ளி தடியாலும், அவரது தலையில் கல்லைப் போட்டும் தாக்கியதில், வீரமுத்து பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாா், ராஜேந்திரனை கைது செய்தனா். ரத்தினத்தை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com