விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 45,162-ஆக உயா்ந்தது.
இதனிடையே, 17 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 44,595-ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் தற்போது 214 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 352 போ் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்....
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 30,583-ஆக உயா்ந்தது.
இதுவரை 30,030 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 348 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 205 போ் உயிரிழந்தனா்.