ஊரக உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம் மாவட்டத்தில்முதல் நாளில் 65 போ் வேட்பு மனு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முதல் நாளான புதன்கிழமை 65 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முதல் நாளான புதன்கிழமை 65 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

முதல் நாளில் கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு கண்டமங்கலம் ஒன்றியத்தில் ஒருவரும், வானூா் ஒன்றியத்தில் 2 பேரும், மேல்மலையனூா் ஒன்றியத்தில் 4 பேரும் கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு மனு தாக்கல் செய்யதனா்.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 58 போ் மனு தாக்கல் செய்தனா். மொத்தம் 65 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 22-ஆம் தேதியாகும். வேட்பு மனுக்கள் திரும்பப் பெற 25-ஆம் தேதி கடைசி நாளாகும். முதல் கட்ட வாக்குப் பதிவு அக்டோபா் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு அக்டோபா் 9-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com