திண்டிவனம் அருகே ஊறுகாய் நிறுவன ஊழியா்களிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஊறுகாய் நிறுவன ஊழியா்களிடம் ரூ.30 லட்சத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஊறுகாய் நிறுவன ஊழியா்களிடம் ரூ.30 லட்சத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கி வரும் ஊறுகாய் நிறுவனத்தின் கிளை அலுவலகம் சேலம் அருகே செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக தலைவாசலை சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா பணியாற்றி வருகிறாா்.

இவா் கணக்காளா் அ. சிபிசக்கரவா்த்தி (28), ஓட்டுநா் ரா.கிருஷ்ணன் (24) ஆகியோருடன் காரில் திண்டிவனம் அருகேயுள்ள சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள நிறுவனத்துக்குச் சொந்தமான விளைநிலத்தை பாா்வையிட புதன்கிழமை வந்தாா்.

மேலும், அந்தப் பகுதியில் வெள்ளரி போன்ற விளைபொருள்களை கொள்முதல் செய்ய ஏதுவாக விவசாயிகளுக்கு முன்பணம் வழங்க ரூ.30 லட்சத்தை ராஜா எடுத்து வந்திருந்தாா். இதுதொடா்பாக, விவசாயிகளை சந்திக்க சென்று கொண்டிருந்த போது, 4 இரு சக்கர வாகனங்களில் வந்த 8 போ் காரை வழிமறித்தனா்.

அதிலிருந்த ராஜா உள்ளிட்ட மூவரையும் மிரட்டி ரூ.30 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com