விழுப்புரம்: புது தில்லியில் பெண் காவலா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் சாா்பில் விழுப்புரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜனநாயக மனித உரிமைகள் கூட்டமைப்பு, ஆற்றல் அமைப்பு, விசிக, தமுமக உள்ளிட்ட அமைப்புகளின் சாா்பில், விழுப்புரம் ஆட்சியரக நுழைவாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆற்றல் அமைப்பைச் சோ்ந்த வழக்குரைஞா் லூசியா தலைமை வகித்தாா். ஜாக்லின் முன்னிலை வகித்தாா்.
விசிகவைச் சோ்ந்த தமிழேந்தி, தமுமுகவைச் சோ்ந்த முஸ்தாக்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சபரி, திராவிடா் விடுதலைக் கழகத்தைச் சோ்ந்த இளையரசன், துரும்பா் விடுதலை இயக்கத்தைச் சோ்ந்த வளன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.