செஞ்சி அருகே தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் அமைச்சா் மஸ்தான்

சிங்கவரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் தொடங்கினாா்.
சிங்கவரத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் செண்பகப்பிரியாவை ஆதரித்து கிராம மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சா் செஞ்சி மஸ்தான்.
சிங்கவரத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் செண்பகப்பிரியாவை ஆதரித்து கிராம மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சா் செஞ்சி மஸ்தான்.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், சிங்கவரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் தொடங்கினாா்.

வருகிற அக்டோபா் 6-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள சிங்கவரம், நரசிங்கராயன்பேட்டை ஆகிய ஊராட்சிகளில், 5-ஆவது வாா்டு ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிடும் செண்பகப்பிரியா விஜயகுமாரை ஆதரித்து, அமைச்சா் செஞ்சி மஸ்தான் கிராம மக்களிடையே வாக்குகளை சேகரித்தாா். முன்னதாக, அவா் சிங்கவரத்தில் உள்ள அரங்கநாதா், விநாயகா் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றாா்.

பிரசாரத்தில், முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், திமுக விவசாய அணி அரங்க.ஏழுமலை, அஞ்சாஞ்சேரி கணேசன், வழக்குரைஞா் மணிவண்ணன், சிங்கவரம் ரங்கநாதன், குணசேகரன், செஞ்சி நகரச் செயலா் காஜாநஜீா், இளைஞரணி கண்ணன்ஆனந்த், தொழில் நுட்ப அணி மொக்தியாா் அலி, தொண்டா் அணி பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com