வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு செப்.24-இல் பயிற்சி வகுப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு செப்.24-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு செப்.24-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தலில் வாக்குச்சாவடி அலுவலா்களாக பணியாற்றுவோருக்கு முதல் பயிற்சி வகுப்பு செப்.24-ஆம் தேதியும், 2-ஆவது பயிற்சி வகுப்பு செப்.29-ஆம் தேதியும் நடைபெறும்.

தோ்தல் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் உரிய காரணமின்றி இந்தப் பணியை ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் த.மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com