ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 1,838 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 861 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 25 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 180 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 213 பேரும், ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 1,420 பேரும் என மொத்தம் 1,838 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
இதுவரை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 86 பேரும், ஒன்றிய குழு உறுப்பினா் பதவிகளுக்கு 970 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 3,160 பேரும், ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 12,574 பேரும் என மொத்தம் 16,790 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 861போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 15 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 63 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 78 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 705 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதுவரை 9,129 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இன்று கடைசி நாள்: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய புதன்கிழமை (செப்.22) கடைசிநாளாகும்.
23-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 25-ஆம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். அக். 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.