வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சித் தோ்தலில் பணிபுரியும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சித் தோ்தலில் பணிபுரியும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் காஞ்சனா பயிற்சியைத் தொடக்கிவைத்தாா்.

இதில் காலையில் நடைபெற்ற பயிற்சியில் 720 அலுவலா்களும், பகலில் நடைபெற்ற பயிற்சியில் 798 பேரும் கலந்து கொண்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, சுப்பிரமணியன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாறன், கண்ணன், குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பயிற்சி அளித்தனா். வாக்குப்பதிவு அலுவலா்களின் பணிகள் குறித்த கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com