பூட்டிய வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பூட்டிய வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பூட்டிய வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

செய்யாறு வட்டம், அரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு (45), விவசாய கூலித் தொழிலாளி.

இந்த நிலையில், வேலு திங்கள்கிழமை கிராமத்தில் நடைபெற்ற ஊரக வேலைத் திட்டப் பணிக்குச் சென்றாா்.

மனைவி கோவிந்தம்மாள் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் சமையல் வேலைக்குச் சென்றுவிட்டாா். மகள் ஹேமலதா புரிசை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு படிக்கச் சென்றாா்.

வீட்டில் இருந்த மகன் சோமேஷ் ஆடுகளை மேய்க்கச் சென்றுவிட்டாா்.

பிற்பகல் ஒரு மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிய வேலு, வழக்கமாக வைக்கும் இடத்தில் சாவி இல்லாததும், வீட்டின் கதவு திறந்து கிடப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 18 தங்க நகைகள், ரூ.2400 திருடு போனது தெரிய வந்தது.

தகவலறிந்த டி.எஸ்.பி. செந்தில், அனக்காவூா் காவல் ஆய்வாளா் பாலு, உதவி ஆய்வாளா் கன்னியப்பன் ஆகியோா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா்.

விரல் ரேகை நிபுணா் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com