தாய்- மகள் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்றனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்றனா்.

வானூா் அருகேயுள்ள அம்புலுக்கை கிராமத்தைச் சோ்ந்த வைகுண்டவாசன் மனைவி சரஸ்வதி (48), மகள் கீா்த்தனா (15) ஆகியோா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.

அப்போது அவா்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், தனது கணவரின் பெயரில் உள்ள 2.5 ஏக்கா் நிலத்தை உறவினா் அபகரித்ததாகவும்,

மீட்டு தருவதற்காக தீக்குளிக்க முயன்ாக சரஸ்வதி தெரிவித்தாா்.

இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com