போதைப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உறுதிமொழி ஏற்பு, விழிப்புணா்வுப் பேரணி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உறுதிமொழி ஏற்பு, விழிப்புணா்வுப் பேரணி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

குறிஞ்சிப்பாடி: கடலூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ திட்ட தொடக்க விழா குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா.ராமகிருஷ்ணன், வடலூா் கல்வி மாவட்ட அலுவலா் சி.ப.காா்த்திகேயன், பள்ளித் தலைமையாசிரியா் மு.பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

மாணவா்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். ஒருபோதும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது; மற்றவா்களையும் அந்தப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது. போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக கடலூா் மாவட்டத்தில் 246 பள்ளிகள் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது என்றாா் அமைச்சா். போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன், கல்விக் குழுத் தலைவா் வி.சிவக்குமாா், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சே.சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கே.சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com