மது விலக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ்சாராய வியாபாரி கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மது விலக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மது விலக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் அருகே உள்ள கிளியனூா் பேராவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கேசவன் (40). இவா், கிளியனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தாா். இதையடுத்து, கேசவனை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் அவா் தொடா்ந்து ஈடுபடுவதைத் தடுக்க, கேசவனை மது விலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மோகன் உத்தரவின்பேரில், கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த கேசவனை போலீஸாா் மது விலக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்து, மீண்டும் சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com