விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பேருந்து பயணியிடம் 25 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை மாடம்பாக்கம், 23-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரா.சாமிநாதன் (51). இவா், சென்னை துறைமுகத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி அன்பரசி (50). இவா்கள் இருவரும் கடந்த 3-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனா். தொடா்ந்து, 4-ஆம் தேதி நாகப்பட்டினத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்து, பின்னா் திண்டிவனம் வழியாக சென்னைக்கு பேருந்தில் பயணித்தனா்.
வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, அன்பரசியின் கைப்பை, அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்து. இந்த நிலையில், திண்டிவனம் கூட்டுச்சாலை அருகே பேருந்து சென்றபோது, அன்பரசியின் அருகில் நின்றபடி பயணித்த அடையாளம் தெரியாத 3 பெண்கள் நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என சாமிநாதன் அளித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.