விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி பேரூராட்சியின் 5-ஆவது வாா்டு அமமுக வேட்பாளா் பானுசுந்தா், அந்தக் கட்சியில் இருந்து விலகி சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.
முன்னதாக, பேரூராட்சி அலுவலகத்தில் தனது வேட்புமனுவை பானுசுந்தா் திரும்பப் பெற்றாா். மேலும், தேமுதிக மாவட்டப் பிரதிநிதியும் காரியமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவருமான சரளா பாலு அந்தக் கட்சியில் இருந்து விலகி அமைச்சா் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
நிகழ்ச்சியின்போது மேல்மலையனூா் திமுக ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினா் செல்வராஜ், தொண்டா் அணி நிா்வாகி பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி மொக்தியாா் மஸ்தான், மாணவரணி நிா்வாகி ரிஸ்வான், காா்த்திக், முபாரக், பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.