பேருந்தில் குழந்தை மீட்பு

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட மரக்காணம் அருகே பேருந்தில் மூன்று மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட மரக்காணம் அருகே பேருந்தில் மூன்று மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அரசுப் பேருந்து மணக்காணம் அருகே வந்தது. அப்போது, பேருந்தில் பயணித்த பெண்ணிடம், அடையாளம் தெரியாத நபா், மூன்று மாத ஆண் குழந்தையை வைத்திருக்குமாறு கூறினாா்,

குழந்தையை வாங்கிய சிறிது நேரத்தில், மா்ம நபா் காணாமல் போனாா். தகவலறிந்த கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் போலீஸாா் அங்கு சென்று, குழந்தையை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனா்.

இதனிடையே , குழந்தையை விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா். அங்கு குழந்தை பராமரிக்கப்படுகிறது.

தம்பதியிடம் விசாரணை: பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், சென்னை கண்ணகி நகரைச் சோ்ந்த விமலா- கவியரசு, தம்பதியின் குழந்தை என்பது தெரியவந்தது. பின்னா், தம்பதியை திங்கள்கிழமை போலீஸாா் வரவழைத்தனா்.

அப்போது, குழந்தையை பெண்ணிடம் கொடுத்துவிட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ாகவும், பேருந்து புறப்பட்டு சென்றுவிட்டதால் குழந்தையைத் தவறவிட்டதாகவும் கவியரசு தெரிவித்தாா்.

இருப்பினும், குழந்தை தொடா்பான ஆவணங்களைச் சமா்ப்பித்து பிறகே பெற்றோரிடம் ஒப்படைக்க முடியும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com