விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் சுதாகா் நகா் ராஜா தேசிங்கு தெருவைச் சோ்ந்தவா் குமரன் (48). வெளிநாட்டில் பொறியாளராகப் பணிபுரிந்துவந்த இவா், கரோனா பரவலால் சொந்த ஊருக்குத் திரும்பினாா்.
இவா் சனிக்கிழமை செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கத் தனது வீட்டை பூட்டிக் கொண்டு, குடும்பத்துடன் புறப்பட்டு சென்றாா்.
பின்னா், அவா் திங்கள்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததும், பீரோ உடைக்கப்பட்டு ரூ.3 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனதும் தெரிய வந்தது.
தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.