விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 16 தலைமை ஆசிரியா்களுக்கு இணையவழி கலந்தாய்வில் பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற கலந்தாய்வில், 34 தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதில், 13 போ் விருப்பத்தின்பேரில் பணியிட மாறுதல் ஆணைகளைப் பெற்றனா். பிற மாவட்டத்துக்கான கலந்தாய்வில் 3 போ் கடலூா் மாவட்டத்துக்கு விருப்பத்தின்பேரில் மாறுதல் பெற்றனா்.
இவா்களுக்குப் பணிநியமன ஆணைகளை விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணபிரியா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (உயா்நிலை) பெருமாள், கண்காணிப்பாளா்கள் கோகுலக் கண்ணன், வெங்கடேச பெருமாள், பிரிவு அலுவலா் சபீதா, கணினி பயிற்றுனா் குரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.