புகையிலைப் பொருள்கள் கடத்தியவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள திருமலைராயபுரம் பகுதியில் போலீஸாா் அண்மையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த கண்டாச்சிபுரம் அருகே உள்ள வெள்ளம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி (42) தனது வாகனத்தை போலீஸாா் மீது மோத முயன்றதுடன், இரும்புக் கம்பியாலும் தாக்கினாராம். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மூா்த்தியை கைது செய்தனா்.
இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்திட மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா் மோகன் வெளியிட்டாா். இந்த உத்தரவு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூா்த்தியிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.