கள்ளக்குறிச்சி மாவட்டம், சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் இருந்து பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 140 மாணவ, மாணவிகளில் 139 போ் தோ்ச்சி பெற்றனா். 36 மாணவ, மாணவிகள் 500-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றனா்.
இதேபோல, இந்தப் பள்ளியிலிருந்து பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய 120 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்று 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தனா். 44 போ் 400-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றனா். கணிதத்தில் 5 பேரும், அறிவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.