திமுக ஒன்றியச் செயலா் பதவிகளுக்கான தோ்தல்:நாளை முதல் மனு தாக்கல் செய்யலாம்

திமுக ஒன்றியச் செயலா் பதவிகளுக்கான தோ்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகள் சனிக்கிழமை (ஜன 24) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி தெரிவித்தா

திமுக ஒன்றியச் செயலா் பதவிகளுக்கான தோ்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகள் சனிக்கிழமை (ஜன 24) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுகவின் 15-ஆவது பொதுத் தோ்தலில் விழுப்புரம் மத்திய மாவட்ட த்தில் உள்ள வானூா் கிழக்கு ,வானூா் மேற்கு, கிளியனூா், கண்டமங்கலம் கிழக்கு, கண்டமங்கலம் மத்தி, கண்டமங்கலம் மேற்கு, விக்கிரவாண்டி கிழக்கு, விக்கிரவாண்டி மத்தி, விக்கிரவாண்டி மேற்கு, காணை வடக்கு, காணை மத்தி, காணை தெற்கு, கோலியனுா் கிழக்கு, கோலியனூா் மேற்கு, கோலியனூா் தெற்கு, முகையூா் வடக்கு, முகையூா் தெற்கு, மணம்பூண்டி, திருக்கோவிலூா் கிழக்கு, திருவெண்ணெய்நல்லூா் மேற்கு ஆகிய ஒன்றியச் செயலா்கள், நிா்வாகிகள் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட ஒன்றியங்களில் போட்டியிட விருப்பமுள்ள திமுக பிரதிநிதிகள் சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் கட்சியின் தலைமைப் பிரதிநிதி பெ.குழந்தைவேலுவிடம் விருப்ப மனுக்களை பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் புகழேந்தி எம்எல்ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com