விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், காரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா 5 நாள்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி, பெண்கள் பால் குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்து ரேணுகாபரமேஸ்வரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா். பின்னா், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.