முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மாணவிக்கு பாலியல் தொந்தரவு:ஆசிரியா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 19th March 2022 01:12 AM | Last Updated : 19th March 2022 01:12 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரையடுத்து, அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா் ஜெயசீலன் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் தலைமை ஆசிரியரிடம் புகாரளித்தனா்.
இது தொடா்பாக மாவட்டக் கல்வித் துறை அலுவலா்களும் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, இடைநிலை ஆசிரியா் ஜெயசீலனை பணியிடை நீக்கம் செய்து பள்ளித் தாளாளா் பிரான்சிஸ் ஜோசப் உத்தரவிட்டாா்.