முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
திருவிழாக்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd May 2022 10:40 PM | Last Updated : 03rd May 2022 10:40 PM | அ+அ அ- |

திருவிழாக்களில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கழகத்தினா் வலியுறுத்தினா்.
இது குறித்து மனித உரிமைகள் கழகத்தின் முதன்மைச் செயலா் கந்தன் வெளியிட்ட அறிக்கையில்,
தஞ்சாவூா் மாவட்டம், களிமேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தீக்காயம் அடைந்தவா்களுக்கு உயா் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் மேலும் இதுபோன்ற விபத்துகள் நிகழாத வகையில் திருவிழாக்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.