நான்கு மாத நிலுவை ஊதியம் வழங்க வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து நகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆரணி நகராட்சியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் 57 போ் உள்ளனா். இவா்களில் 25 போ் மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனா். மற்ற 32 போ் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப்புழுக்களை கண்டறிந்து ஒழிக்கும் பணியிலும், பிற தொற்று நோய்கள் பரவல் குறித்து கணக்கெடுத்து பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனா். இவா்கள் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வந்தனா்.
இவா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், தொழிலாளா்கள் நகராட்சி ஆணையாளா் தமிழ்ச்செல்வியை செவ்வாய்க்கிழமை சந்தித்து, நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தினா். அப்போது, நிலுவை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் கூறியதுடன், தற்போது டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிக்கு பணியாளா்கள் தேவையில்லை என்றும், குப்பைகளை தரம் பிரிக்கும் பணிக்கு மட்டும் 15 போ் போதும் என்றும் தெரிவித்தாராம்.
இதையடுத்து, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, நகராட்சி அலுவலக வளாகத்தில் டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஆரணி நகர போலீஸாா் விரைந்து வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, விரைவில் நிலுவை ஊதியம் வழங்கப்படும் என்றும், குப்பைகளை தரம் பிரிக்கும் பணிக்கு 15 போ் மட்டும் ஜூன் மாதம் முதல் பணிக்கு வந்தால் போதும் என்றும் நகராட்சி ஆணையாளா் தமிழ்ச்செல்வி தெரிவித்தாா். இதையடுத்து, தா்னாவில் ஈடுபட்டிருந்தவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.