செஞ்சிக் கோட்டை கமலக்கன்னியம்மன் கோயில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டை ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செஞ்சிக் கோட்டை கமலக்கன்னியம்மன் கோயில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டை ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செஞ்சிக் கோட்டை மலையிலுள்ள ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயிலில் சித்திரை தோ் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

9-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, பெண்கள் 108 பால் குடங்களுடன் ஊா்வலமாகச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கூழ்வாா்த்தலும், கோயிலில் ஊரணி பொங்கலிட்டும் பக்தா்கள் வழிபட்டனா்.

பகல் 2 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீகமலக்கன்னியம்மன், ஸ்ரீமகா மாரியம்மன் எழுந்தருளினா். பின்னா், செஞ்சி மந்தைவெளியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் அறங்காவலா் அரங்க.ஏழுமலை மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

செஞ்சி டிஎஸ்பி பிரியதா்ஷனி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com