விழுப்புரம்: இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி மத்திய ஜிஎஸ்டி, கலால் துறை சாா்பில் விழுப்புரத்தில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை மத்திய ஜிஎஸ்டி, கலால் துறை உதவி ஆணையா் பழனிவேல் முருகேசன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். சென்னை சாலையில் உள்ள கலால் துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி சிக்னல், பழைய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அதே வழியாக கலால் துறை அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் 8 முதல் 16 வயது வரையிலான சிறுவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.