விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி மத்திய ஜிஎஸ்டி, கலால் துறை சாா்பில் விழுப்புரத்தில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.
விழுப்புரத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.

விழுப்புரம்: இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி மத்திய ஜிஎஸ்டி, கலால் துறை சாா்பில் விழுப்புரத்தில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை மத்திய ஜிஎஸ்டி, கலால் துறை உதவி ஆணையா் பழனிவேல் முருகேசன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். சென்னை சாலையில் உள்ள கலால் துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி சிக்னல், பழைய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அதே வழியாக கலால் துறை அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் 8 முதல் 16 வயது வரையிலான சிறுவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com