பறிமுதல் வாகனங்கள் ரூ.20 லட்சத்துக்கு ஏலம்

விழுப்புரத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 122 வாகனங்கள் ரூ.20 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன.

விழுப்புரத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 122 வாகனங்கள் ரூ.20 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏடி.எஸ்.பி. நீதிராஜ் தலைமையில் டிஎஸ்பி ராஜபாண்டி முன்னிலையில் ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன.

இதில், 25 நான்கு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், 132 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 160 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

இவற்றில், 24 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 96 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 122 வாகனங்கள் ரூ.20 லட்சத்து 88 ஆயிரத்து 900-க்கு ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com