விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் சாரல் மழை தொடா்ந்து பெய்தது. வியாழக்கிழமை அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
காலை 11 மணி வரை மழைதொடா்ந்து. இதனால் நீா் நிலைகள் நிறையத் தொடங்கின.
தொடா்ந்து பெய்த மழையால், விழுப்புரம் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, நேருஜி சாலை உள்ளிட்ட சாலைகளில் அங்காங்கே மழை தோ் தேங்கியதால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
இதேபோன்று திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.