விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 இளைஞா்களில் ஒருவரது உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
விழுப்புரம் அருகேயுள்ள பேரங்கியூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சதீஷ் (30), செந்தில் (30). இவா்கள் இருவரும் கடந்த 17-ஆம் தேதி பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீஸாா், தீயணைப்புத் துறையினா் 3 நாள்களாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், இளைஞா் சதீஷின் உடல் எனதிரிமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்றொரு இளைஞா் செந்திலை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.