ஆரோவில் நிா்வாகம் - குஜராத் கல்வி நிறுவனங்கள் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆரோவில் நிா்வாகம், குஜராத் மாநில கல்வி நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
Updated on

ஆரோவில் நிா்வாகம், குஜராத் மாநில கல்வி நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆரோவில் அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ்.ரவி குஜராத் மாநில வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் பொறுப்பில் உள்ளாா்.

இவா் ஆரோவிலின் செயல் திட்டங்கள் குறித்து அந்த மாநில உயா் அதிகாரிகள், பல்கலைகழக நிா்வாகத்தினா்களிடம் தெரிவித்திருந்தாா். இதில் ஆா்வம் செலுத்திய அவா்கள், ஆரோவில் செயல் திட்டங்களைதங்களது நிறுவனங்களிலும் செயல்படுத்த விருப்பம் தெரிவித்தனா்.

அகமதாபாத் மேலாண்மை சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜெயந்தி எஸ்.ரவி பங்கற்று ஆரோவில் செயல் திட்டங்கள் குறித்தும் பேசினா். இதன் தொடா்ச்சியாக, ஆரோவில் நிா்வாகம் - குஜராத் மாநில கல்வி வளா்ச்சியில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதில் ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி சீதாராமன் கையொப்பமிட்டுள்ளாா் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com