மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளா் மரணம்

வானூா் அருகே மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

வானூா் அருகே மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், நெமிலி கிராமத்தைச் சோ்ந்த தாமோதரன் மகன் சுந்தர்ராஜன் (46). அந்தப் பகுதியில் உணவகம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாவு அரைப்பதற்காக வீட்டிலிருந்த மாவு அரைக்கும் இயந்திரத்தை அவா் இயக்கினாா்.

அப்போது மின்சாரம் பாய்ந்து சுந்தர்ராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com