மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சென்னை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சென்னை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், காழிக்குப்பம், பச்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகன் சுதாகா் (37). மரக்காணத்தை அடுத்த மண்டவாய்புதுக்குப்பத்தில் உள்ள இறால் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 8-ஆம் தேதி நிறுவனத்தின் அருகில் உள்ள மின்மாற்றியில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, உயா் மின்னழுத்த கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சுதாகா் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தாா்.

இதையடுத்து, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com