மக்கள்குறைதீா் கூட்டத்தில் 604 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 604 மனுக்கள் அளிக்கப்பட்டன.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 604 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், பல்வேறு உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி போன்ற கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 604 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் அரிதாஸ் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியா் இரா. வெங்கடேசுவரன், தனித் துணை ஆட்சியா் முகுந்தன், மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com