உளுந்தூா்பேட்டை அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்குப் பெட்டக லாரி.
உளுந்தூா்பேட்டை அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்குப் பெட்டக லாரி.

உளுந்தூா்பேட்டை அருகே சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து விபத்து

உளுந்தூா்பேட்டை அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்குப் பெட்டக லாரி.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கரூரிலிருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமை அதிகாலை சரக்குப் பெட்டக லாரி சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், சேந்தமங்கலம் பிரிவுச் சாலை அருகே சென்றபோது, ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அருமானுக்கு காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடா்ந்து, போலீஸாா் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com