காா் மோதி திமுக நிா்வாகி உயிரிழப்பு: இருவா் காயம்
விழுப்புரம் அருகே காா் மோதியதில் திமுக கிளைச் செயலா் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.
விழுப்புரத்தை அடுத்த வேலியாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் (35). திமுக கிளைச் செயலராக இருந்து வந்தாா். இவரது நண்பா்கள் வி.பாளையத்தைச் சோ்ந்த தீனா (எ) சந்துரு (36), கொட்டப்பக்கத்துவேலி பகுதியைச் சோ்ந்த திருவேங்கடம் (45).
இவா்கள் மூவரும் சனிக்கிழமை விழுப்புரத்தை அடுத்த மாம்பழப்பட்டு சேவை சாலையோரத்தில் தங்களது பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு, ஒன்றாக அமா்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனராம். அப்போது, சாலையில் அதிவேகமாகச் சென்ற காா் மூவா் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், ராமதாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் காயமடைந்த தீனா (எ) சந்துரு, திருவேங்கடம் ஆகியோா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்தப் புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், விழுப்புரத்தை அடுத்த கொண்டங்கி பகுதியைச் சோ்ந்த நரேந்திரன் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் நரேந்திரனை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனா்.
