பெங்களூரு

அந்தோணியார் திருவிழா: தோர்ணஹள்ளியில் தாற்காலிகமாக ரயில் நிறுத்தம்

அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு தோர்ணஹள்ளி ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்களை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி

அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு தோர்ணஹள்ளி ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்களை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 ஜூன் 12 முதல் 15-ஆம் தேதி அந்தோணியார் திருவிழா நடப்பதை முன்னிட்டு ரயில் எண்கள்-56270 56269-மைசூரு-சிவமொக்கா-மைசூரு பயணியர் ரயில், ரயில் எண்கள்-56276 56275-மைசூரு-தாளகுப்பா-மைசூரு பயணியர் ரயில் தோர்ணஹள்ளி ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக நிறுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
 காலை 10.46க்கு வரும் ரயில் எண்-56270-மைசூரு-சிவமொக்கா பயணியர் ரயில், காலை 10.47 மணிக்கு புறப்படும். ரயில் எண்-56269-சிவமொக்கா-மைசூரு பயணியர் ரயில் தினமும் மாலை 3.30 மணிக்கு வந்து மாலை 3.31 மணிக்கும், ரயில் எண்-56276-மைசூரு-தாளகுப்பா பயணியர் ரயில் தினமும் நண்பகல் 1.40 மணிக்கு வந்து நண்பகல் 1.41 மணிக்கும், ரயில் எண்-56275-தாளகுப்பா-மைசூரு பயணியர் ரயில் நண்பகல் 1.05 மணிக்கு வந்து நண்பகல் 1.06 மணிக்கும் புறப்படும்.
 ரயில் எண்கள்-16591,16592-ஹுப்பள்ளி-மைசூரு-ஹுப்பள்ளி ஹம்பி விரைவு ரயில் கினிகெரே ரயில் நிலையத்தில் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து நின்று செல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT