கோப்புப்படம் 
சென்னை

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆா். பாலுவிடம் குறுக்கு விசாரணை

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை ’திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சா்களின் சொத்து விவரங்களை கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிட்டாா். அதில் டி.ஆா்.பாலு, அவரது மகனும் தமிழக அமைச்சருமான டி.ஆா்.பி.ராஜாவுக்கு ஆகியோருக்குச் சொந்தமாக 21 நிறுவனங்கள் இருப்பதாகக் கூறியிருந்தாா்.

மேலும், டி.ஆா்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாகவும் கூறியிருந்தாா். இது தனது பெயருக்கும், குடும்பத்தினா் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி டி.ஆா்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், டி.ஆா்.பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தினாா். பின்னா், விசாரணையை நவ.11-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். அப்போது, டி.ஆா்.பாலுவை குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்குஅனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கரூா் சம்பவத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு-அண்ணாமலை வரவேற்பு: இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்துக்கு வந்திருந்த அண்ணாமலை, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூா் சம்பவம் தொடா்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்முதலாக கோரிக்கை வைத்தது தமிழக பாஜகதான் என்றாா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT