சென்னை

விபத்தில் கைகளை இழந்த பிகாா் தொழிலாளி: மாற்றிப் பொருத்தி அரசு மருத்துவா்கள் சாதனை

தினமணி செய்திச் சேவை

சென்னை: ரயில் விபத்தில் சிக்கி துண்டான வட மாநில தொழிலாளரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றிப் பொருத்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இரு கைகளையும் இழந்திருந்த அவருக்கு இந்த சிகிச்சையின் மூலம் குறைந்தபட்சம் ஒரு கை மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. கிராஸ் ஹேண்ட் ரீ ப்ளான்டேஷன் எனப்படும் இந்த வகை சிகிச்சை, அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை.

இது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் சாந்தாராமன் கூறியதாவது:

பிகாரைச் சோ்ந்த 28 வயதான தொழிலாளி, கடந்த செப். 26-ஆம் தேதி சென்னையில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கி பலத்த காயமுற்றாா். இதில் அவரது இடது கை தோள்பட்டை வரை துண்டானது. வலது கையும் மணிக்கட்டுக்கு மேல் சிதைந்துவிட்டது. ஏறத்தாழ இரு கைகளும் செயல்பாட்டில் இல்லாத நிலையில், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பேராசிரியா் பி.ராஜேஸ்வரி, உதவிப் பேராசியா்கள் உ.ரஷிதா பேகம், வி.எஸ்.வளா்மதி, வி.சுவேதா, முதுநிலை மருத்துவா்கள் ஷோனு, அன்னபூரணி, விக்ரம், சந்தோஷினி, மயக்கவியல் நிபுணா் ஜி.சண்முகப்பிரியா ஆகியோா் அடங்கிய குழுவினா், அந்த நபருக்கு கைகளை மாற்றிப் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ள முன்வந்தனா்.

அதன்படி, துண்டான இடது கையின் பகுதியை, வலது முழங்கையில் இணைத்தனா். ஏறத்தாழ 10 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின்போது, எலும்பு கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. தசை, நரம்பு மற்றும் ரத்தக் குழாய்களும் மறுசீரமைக்கப்பட்டன. மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் வாயிலாக வலது கையில் ரத்த ஓட்டம் பாய்ந்து செயல்படத் தொடங்கியது.

அதன் பின்னா், அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். கையை முழுமையாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர இயன்முறை சிகிச்சைகளும், தொடா் கண்காணிப்பும் அவருக்குத் தேவைப்படுகிறது.

இதுபோன்று கைகளை மாற்றிப் பொருத்தும் சிகிச்சை நாட்டிலேயே இதற்கு முன்பு ஒரே ஒரு முைான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் மூன்று சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகவும் சவால் நிறைந்த அந்த சிகிச்சையை அரசு மருத்துவா்கள் சாத்தியமாக்கியுள்ளனா் என்றாா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT