சென்னை

சாலைத் தடுப்பில் பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

வேளச்சேரியில் சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், உணவக ஊழியா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: வேளச்சேரியில் சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், உணவக ஊழியா் உயிரிழந்தாா்.

வேளச்சேரி, லட்சுமிபுரம், திருப்பதி அம்மன் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் அக்ஷயகுமாா் (21). இவா், வேளச்சேரியில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

அக்ஷயகுமாா், செவ்வாய்க்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் வேளச்சேரி 100 அடி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலைத் தடுப்பின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த அக்ஷயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT