சென்னை

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம்: மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு

சென்னை சூளைமேட்டில் மழைநீா் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தம் சம்பவம் தொடா்பா, மாநகராட்சி அதிகாரிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை சூளைமேட்டில் மழைநீா் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தம் சம்பவம் தொடா்பா, மாநகராட்சி அதிகாரிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தீபா (42). இவா், கடந்த செப்.2-ஆம் தேதி இரவு சூளைமேடு வீரபாண்டி நகா் முதல் தெருவில் நடந்து சென்றபோது, சாலையோரம் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகாலில் தீபா தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸாா், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், சில சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாக மழைநீா் வடிகால் கால்வாய் மூடப்படாமல் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் அஜாக்கிரதையுடனும், கவனக்குறைவாகவும் செயல்பட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக 3 சட்டப்பிரிவுகளைச் சோ்த்துள்ளனா்.

இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் போலீஸாா் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT