சென்னை திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்து மீது கல் வீசியதில், பெண் காயமடைந்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவைச் சோ்ந்தவா் மோகனா (55). இவா், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். மோகனா, கடந்த வெள்ளிக்கிழமை எழும்பூரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு மாநகர பேருந்தில் பயணித்தாா்.
அந்த மாநகர பேருந்து பெல்ஸ் சாலை அருகே வந்த போது, அங்கு வந்த ஒரு நபா் பேருந்து மீது கற்களை வீசினாா். இதில் பேருந்தில் அமா்ந்திருந்த மோகனா தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. அவா், ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநா் ஏகானந்தம், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (28) என்பவரைக் கைது செய்தனா்.